*11.05.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்று
சித்ரா பௌர்ணமியை* முன்னிட்டு
செங்கல்பட்டு மாவட்டம், புழதிவாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அன்னை உடனுரை வைத்தீஸ்வரர் சுவாமி*
*சுயம்பு லிங்க* *திருமேனியாக* வயல்வெளியில் தாமாக வெளிவந்து அனைத்து மக்களுக்கும் அருள் பாலிக்கும் வெட்டவெளியில் உள்ள
இந்த ஈசனின் திருக்கோவிலில்
*சந்த் மஹாசபாவின்* சார்பாக
தேசிய செயலாளரும் தமிழக மாநில தலைவருமான
மஹாமண்டேஷ்வரர்
*சுவாமி ஸ்ரீராம்* *சித்ரகுப்த ஜி மகராஜ்* அவர்களின் முன்னிலையில்
இரவு முழுவதும்
சிறப்பு பூஜைகள் அதைத் தொடர்ந்து
நாட்டிய நிகழ்ச்சிகளும்,
பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறி நலமுடனும் வளமுடனும் வாழ அருட் பிரசாதங்கள் வழங்கி
சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
பூஜையில்
சந்த் மஹாசபாவின் நிர்வாகிகளும்,
எல்லாம் வல்ல ஈசனின் அடியார்களும்
அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
என்றும் ஆன்மீகப் பணியில்
*தீபம் பா சண்முகம்*
மாநில பொதுச் செயலாளர்
*சந்த் மஹாசபா*