tamilnadu epaper

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்

கனிமொழி தலைமையில்   எம்.பி.க்கள் குழு ரஷ்யா பயணம்


புதுடெல்லி, மே 23–

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பற்றி வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் நேற்று ரஷ்யா புறப்பட்டனர்.

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கனிமொழி

இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றனர். இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு செல்கிறது.

இந்த குழுவில், சமாஜ்வாடி ராஜீவ் ராய், பாஜ கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மிஅசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகிய எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.