tamilnadu epaper

காங்கோவில் 53பேர் பலி; 431 பேருக்கு பாதிப்பு!

 காங்கோவில் 53பேர் பலி; 431 பேருக்கு பாதிப்பு!

கொரோனாவே பரவாயில்லை போல இருக்கே என்று உலக நாடுகள் கதறிக் கொண்டிருக்கின்றன. மர்ம காய்ச்சல் அறிகுறி தெரிய ஆரம்பித்ததும், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே உயிரிழப்பு ஏற்படுவது மேலும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. கொரோனாவால பாதிக்கப்பட்டவர்கள் கூட தப்பி பிழைக்க வழி இருந்துச்சு.. இது அதை விட மோசமாக இருக்கே என்கிற பதற்றம் உருவாகியிருக்கு. 


தென்ஆப்பிரிக்க நாட்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் சுகாதாரத்துறையில் பெரும் அச்சத்தையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்து விடுகின்றனர். இதனால் அந்நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


காங்கோ காய்ச்சல்


ஆரம்பத்தில் 3 குழந்தைகள் வவ்வால் கறி சாப்பிட்டதாகவும், அதன்பின்னர் அவர்கள் அனைவருமே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நோயால் கடந்த 5 வாரங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  


உலக சுகாதார அமைப்பு இது குறித்து பிப்ரவரி 16ம் தேதி ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்து விடுகின்றனர்.


பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் செர்ஜ் நாகலேபாடோ இது குறித்து, அறிகுறிகளுக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள மிக மிகக் குறுகிய இடைவெளி ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்குள் வேகமாக அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்கள், பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


 


இந்த மர்மமான நோயில் “ரத்தக்கசிவு காய்ச்சல்” அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவை பொதுவாக எபோலா, டெங்கு, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களுடன் தொடர்புடையவை ஆகும். இருப்பினும், சோதனைகளை நடத்திய பிறகு விஞ்ஞானிகள் இந்த அறியப்பட்ட வைரஸ்கள் தான் இதற்கான காரணம் என்பதை அறிய முடிந்தது. இதனால் நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை. பலரும் இது கொரோனா வைரஸாக இருக்கலாமோ என நினைத்துக் கொள்கின்றனர்.அதை போன்ற அறிகுறிகள் கொண்ட காலநிலை காய்ச்சலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ரத்த வாந்தி எடுப்பதுதான் உலக சுகாதார மையத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.