பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் 22 - ‘புவி தினம்’ Earth Day
2025 புவி நாள் கருப்பொருள்: நமது சக்தி நமது கோள் - (our power our planet )
இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருள் நமது சக்தி நமது கோள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை விளக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு
பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி
மாணவர்களுக்கு புவியியை காக்க வேண்டியது அவசியத்தை பற்றி பேசினார். காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி. மனித தேவையின் அத்தியாவசியம் மற்றும் அதிகப்படியான பொருள்களையும், வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்த பூமி எல்லோருக்குமானது இதை நாம் காக்க வேண்டியது அனைவரின் கடமை என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்
வளர்மதி, பழனிச்செல்வி கல்பனா திலகவதி ராஜேஸ்வரி அனுப்பிரியா
மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.