இறுகிப் போய் விட்ட
எந்திர வாழ்க்கையில்
இதயம்
மறந்து போகலாம்.
ஆனால்
தொலைந்து
போய்விடக் கூடாது.
உஷார்...உஷார்
விலங்கு வாழ்வினும்
இழிந்தது
எந்திர வாழ்வு
இதயம் இன்மையால்...
நேசம் என்பது
நேரிய சிந்தனையின்
வீர்ய வெளிச்சம்...
நேசம் கற்பதும்
கற்பிப்பதும்
மனித குலத்தின்
மகத்தானக் கலை...
நேசத்தை விதைக்கலாம்
ஆனால்
விளைச்சலை
விழையக் கூடாது
விளைச்சலே
இல்லை என்று
ஆன பின்பும்
வேதனையில்
வெதும்பாமல்
விதைப்பதை
நிறுத்தாமல்
நேசம் புரிந்து
கொண்டே இருப்பது தான்
நேசத்தின் உன்னதம்
புவி உலகின் பூரணம்.
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்