கல்லூரி படிப்பை முடிக்கும் காலத்தில் இருந்தான் சங்கரன் . இவன் தான் குடும்பத்தில் மூத்தவன் இவனுக்கு பிறகு நான்கு தங்கைகள் ...."
" />
" கல்லூரி படிப்பை முடிக்கும் காலத்தில் இருந்தான் சங்கரன் . இவன் தான் குடும்பத்தில் மூத்தவன் இவனுக்கு பிறகு நான்கு தங்கைகள் ...." " கடினமாக சில ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான படிப்பு பயிற்சி முயற்சியால் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தான் சங்கரன் ....." " கல்லூரி விட்டா வீடு என அவன் வாழ்க்கை பெண் வாசம் தெரியாது கெட்டப் பழக்கமும் அவனிடம் கிடையாது , தங்கைகள் தான் அவன் அன்பு காட்டும் பாராட்டும் உலகம் ....." " படிப்படியாக ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் நடத்தி முடித்தான் . அப்போது அவனுக்கு வயது ஐம்பது...." " தங்கை குடும்பங்களை பார்த்து பார்த்து சீர் வரிசை செய்து அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தான் சங்கரன் அவன் வயதும் பணி ஓய்வை நோக்கி நகர்ந்தது ... " " பலர் பெண் கொடுக்க வந்தும் தன் தங்கைகள் வாழ்க்கை தான் என் லட்சியம் என்று மறுத்து விட்டான் சங்கரன். " இன்று ஓய்வுக்கு பின் தனிமரம் ஆன்மிகம் , கல்விச் சேவை என்று தொடர்ந்து அவன் காலம் ..." " யாரும் இல்லாத அனாதையான பக்கத்து வீட்டு பட்டு பாட்டி சங்கரனை ஏக்கத்தோடு மகனாக பார்க்க தனிமரமான சங்கரன் மனம் தாயாக ஏற்றுக் கொண்டது ......" " உதவுவதற்கும் உதவியாக இருப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை மனதளவில் உணர்ந்தான் சங்கரன்...." " இப்போதெல்லாம் தாய்ப் பாசத்தில் கரைந்து நெகிழ்ந்து பட்டுப் பாட்டி மடியில் தினமும் தலையை சாய்த்து உறங்கியே போகிறான் சங்கரன்...." Breaking News:
படிப்பு