கடுகும் சீரகமும் கருத்தாய் இருக்க
கடலைபருப்பு கண் விழித்திருக்க
மிளகு கொஞ்சம் மிடுக்காய் தானிருக்க
உளுந்து உருண்டையும் தட்டையுமாய்
வெந்தயம் மட்டும் கசப்பை காட்டிடவே
மத்தியில் மஞ்சள் தூள் மகிழ்ந்திருக்க
இது எப்படி அஞ்சறை பெட்டி ஆனது?
ஏழு அறை பெட்டியாய்த் தானே இருக்கனும்?
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்