வெண்பனி சாயலுடன்
மெல்ல மெல்ல குனிந்தது வானம்...
மழைத்துளிகள் பூமியைச் சேரும் முன்
மல்லிகைப் பூக்கள் அதிர்ந்து விழுந்தன
அந்த மெல்லிய தாக்கம் கூட
கவிதை போல் இருந்தது.
அந்தக் கவிதைகளின் வாசத்தில்
மரங்கள் மெதுவாகத் தலை அசைத்தன,
மலர்கள்…? பொன் சிரிப்பில் தோகை விரித்தது,
மழைக்கு நன்றி சொல்லும் பாவனையில்.
பூமித்தாயின் மார்பில்
புல்வெளிகள் பசுமையாய் பிறந்தன,
செடிகொடிகள் கனிவாகக் குனிந்தன.
அதில் தும்பி கூட்டங்கள்,
கண்கள் உருட்டும் சிறு சாந்தமாய்,
மலர்களை வலம் வந்து
மறுபடியும் பறந்தன.
மரங்கள் தந்த பூக்களில்
காய்கள் கனிகள் விளைந்தன…
சின்ன குழந்தைகள் போல
சுற்றிய உலகைப் பார்ப்பதுபோல்.
அப்போது...
மயில்கள் தோகை விரித்தன –
மழையின் இசையில் ஆடத் தொடங்கின.
அந்த நடனத்தில் என் மனமும்…
ஒரு சிறு அசைவால் ஒலித்தது.
ஆனால்...
இவற்றை எல்லாம் மிஞ்சிய ஒன்று –
அவள்!
மழையில் நனைந்தாள்,
கார்மேகக் கூந்தலில் ஒரு நிலா இருந்தது,
மயில்போல் விரித்த தோள்களால்
மழையைத் தழுவினாள்.
அவள் விரித்த இருகைகளும்
மழையில் ஆடிய பரிவும்...
என் இதயத்தைப் பறித்தது.
ஒரு மலர் கொடி போல
அவளே என்னைச் சுற்றினாள்.
அந்த மழை ஓர் காட்சி மட்டும் இல்லை...
அவளின் உள்ளம் என்னுள் பொழிந்த ஓர் நினைவு.
மழையில் அவள் நனைந்ததால் மழையில் அவள் நனைந்தால் என சொல்லவில்லை ..
மழையாகவே அவள் என சொல்வேன்
ஜானகி
துறையூர்