ருசி இல்லையென்றாலும்
வயிறு நிரம்பினால் நிம்மதி
நிறம் இல்லையென்றாலும் குணம் இருந்தால் நிம்மதி
மாளிகை இல்லையென்றாலும் சொந்தக் குடிசை நிம்மதி
வயதானாலும் ஒற்றைக்கண்ணாவது தெரிந்தால்தான் நிம்மதி
காலும் கையும் பயன்பட்டால் காலம் முழுவதும் நிம்மதி
கந்தை துணியானாலும் மானம் காத்தால்தான் நிம்மதி
பிள்ளைகள் படிப்பு, ஒழுக்கம் பண்பாட்டில் சிறந்தால் நிம்மதி
பேரன் பேத்திகள் முகத்தில் தெரிகின்ற ஆனந்தம் தனி நிம்மதி
வயதானாலும் நினைவாற்றல் இருப்பது நிம்மதி
திறமைக்கு அங்கீகாரமும் உழைப்புக்கு ஊதியமும்
உண்மைக்கு மதிப்பும் நிம்மதி
இன்னும் நிறைய நிம்மதி வேண்டும் மனம் தளராமல் இருத்தல் நிம்மதி.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்