ஏய் ரமா ரமா" என உரக்கக் கூப்பிட்டபடி உள்ளே வந்தாள் உமா. "வா வா உமா", எனச் சிரித்தபடி வந்த ரமா "ஏன் கத்தறே" />
tamilnadu epaper

பரிசு

பரிசு


"ஏய் ரமா ரமா" என உரக்கக் கூப்பிட்டபடி உள்ளே வந்தாள் உமா. "வா வா உமா", எனச் சிரித்தபடி வந்த ரமா "ஏன் கத்தறே உள்ளே வா, சொல்லு என்ன விஷயம்" என்றாள். "இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா" என்ற உமாவிடம் "அதை எப்படி மறக்க முடியும், நல்லா நினைவு இருக்கு" என்றாள் ரமா.


இருவரும் சகோதரிகள் அம்மா இல்லை, அப்பா அருகிலேயேத் தனியாக வசித்தாலும் நாள் தவறாது மாலை நேரத்தில் வந்துப் பார்ப்பது வழக்கம். இன்று அவருக்கு 63வதுப் பிறந்தநாள். மாலை வந்தவுடன்... அவருக்கு என்னப் பரிசுக் கொடுக்கலாம் என இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர்.


"நம்ம ரெண்டுப் பேரோட எண்ணமும் ஒரேமாதிரி தான் இருக்கும் என நான் ஏற்கனவே வாங்கிட்டேன்டி, இங்கப் பாரு எப்படி இருக்குன்னு சொல்லு" என்றபடி ஒரு டப்பாவைத் திறந்தாள் ரமா. அதில் சில்வர் ஸ்ட்ராப் பளபளக்க அட்டைப் பெட்டியில் பெரிய டயலோடு கைகடிகாரம் அழகாக ஜொலித்தது.


 "ஜோரா இருக்குடி, அப்பாக் கைக்கு அம்சமா இருக்கும், நேரம் தவறாது நம்மைப் பார்க்க வரும் அப்பாவுக்கு இதை விடச் சிறந்தப் பரிசு என்ன இருக்க முடியும்" என்றாள் உமா


"நா உன்கிட்டக் கேக்காம வாங்கிட்டேன்னு கோபம் இல்லலையா அக்கா" சிலநேரம் இப்படித் திடீர் மரியாதைக் கொடுப்பதும் இருவருக்கும் வழக்கம்.


" என் செல்லத் தங்கை, என்னை விட புத்திசாலி சுறுசுறுப்புன்னு தெரியாதா லூசு. எனக்கு எந்தக் கோபமும் இல்லை" எனத் தங்கையை அணைத்தபடி

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு அப்பாவின் வரவை எதிர்பார்த்துச் சகோதரிகள் காத்திருந்தனர்.



-நா.பத்மாவதி

கொரட்டூர்