தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை நேர்முக சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.