உலகளாவிய சக்தி வாய்ந்த 12 தொழில் நுட்ப மையங்களில் பெங்களூரும் இடம் பிடித்திருப்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிறது.10 லட்சம் பேர் பணியாளர்கள்.
தந்தைக்கு மரியாதை செலுத்தலை வலியுறுத்தும் முத்து ஆனந்த் கட்டுரை காலங காலமாகப் பலரும் எடுத்துரைக்கப் பட்டே வருகிறது . இளைய தலைமுறை கருத்தில் கொண்டால் நல்லது. இல்லாவிடில் அவர்களுக்கும் பின்னால் இதே நிலை தானே வரப் போகிறது.
பொட்டு தயாரித்து
தினம் ரூ 3000/- சம்பாதிக்கலாமா?வேலை வேலை என்று அலைய வேண்டாமே. பொட்டு வைத்த வட்ட முகங்கள் பெருகட்டும்.
சுய தொழில் பகுதி அறியாத பேர்களையும் அறியத் தூண்டுகிறது.
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி எனப் பாக்கிஸ்தான் பிரதமர்
கூறுவது உலக மகா நகைச் சுவை. பிறகு ஏன் இந்தியாவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்.
சீனாவில் 30 இலட்சம் இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்களாம் .
பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடிய காலம் போய்விட்டது.
உணவுப் பொருட்களைப் பொரிக்கச் சிறந்த 4 எண்ணெய்களில் நெய்யும் தேங்காய் எண்ணெயும் அமெரிக்க மருத்துவரால் சுட்டப் பட்டுள்ளது.சிறப்பு.
சூரியகாந்தி எண்ணெய் கனோலா போன்ற விதை எண்ணெய்களைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளதை ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும்.
அயலகத்திற்குக் கல்வி கற்கச் சென்றால்
கற்கும் பணியில் கவனம் செலுத்துவதை விடுத்து பிற பணிகளில் நாட்டம் கொள்வது தேவையா?
மணமக்களை அரிசி தூவி வாழ்த்துவதைத் தவிர்த்து மலர்கள் தூவி வாழ்த்தச் சொல்லி ஆண்டுக்கு 1லட்சத்து 20 ஆயிரம் கிலோ அரிசி வீணாகிறது என்ற புள்ளி விவரத்தையும் சி பி எம் செயலாளர் சண்முகம் தெரிவித்திருப்பது சிந்திக்கத் தக்கது.
சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி