tamilnadu epaper

விதியின் ஆட்டம்

விதியின் ஆட்டம்


அவர் மிகு நிதி சேர்த்தார்;


இவர் மக்களை ஏமாற்றிப் பிழைத்தார்;


என்றே சொல்லியே

பாரெங்கும் திரிந்தார்.


சதி செய்யும் சமர்த்தர் அவர்.


மெத்தப் படித்த மதியாளர் அவர். 


தன்வினை தன்னைச் சுடும்; வேறென்ன?


மிதிக்கும் விதிக்கு 

தப்பாமல் தலைவணங்கி,


தன் வீட்டில் தனியாய் நின்றார்.


குங்கலியம் சுமந்த கழுதையென.



-சசிகலா விஸ்வநாதன்