நார்வே செஸ் தொடர்பாக பிரக்ஞானந்தா கூறியதாவது:
மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவரது சொந்த மண்ணில் விளையாடுவதை எனக்கான சவாலாக கருதவில்லை. பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் வீரருக்குத்தான் இது முக்கியம். ஆனால் எனக்கு அது முக்கியம் இல்லை. நான் எப்போதும் நல்ல சவாலை ரசிப்பேன். கடந்த ஆண்டு ஃபிடே உலகக் கோப்பைக்குப் பிறகு, மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக நான் விளையாடும் முதல் கிளாசிக்கல் ஆட்டம் இதுவாகும். அவருக்கு எதிராக விளையாடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதேபோன்றுதான் மற்ற வீரர்களுக்கு எதிராக மோதுவதிலும் உற்சாகமாக இருக்கிறேன். இங்குள்ள அனுபவம் எதிர்கால போட்டிகளில் எனக்கு உதவும்.
நார்வே செஸ் போட்டி மிகவும் வலுவானது. எனது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் சவாலாகவும் இந்த தொடரை பார்க்கிறேன். வேறு எங்கும் விளையாடாத நேரக் கட்டுப்பாட்டை நார்வே செஸ் தொடரில் விளையாட உள்ளதை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
இந்த ஆண்டு போட்டிகள் அதிகம் உள்ளன.நார்வே செஸ் போட்டிக்குப் பிறகு, செஸ் ஒலிம்பியாட்போட்டிக்காக புடாபெஸ்ட் செல்கிறோம். ஆண்டின் பிற்பகுதியில் குளோபல் செஸ்லீக்கிலும் விளையாடுகிறேன். இப் போதைக்கு, எனது கவனம் நார்வே செஸ் தொடர் மீது உள்ளது, என்னால் முடிந்ததைச் செய்ய உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நன்கு தயாராக இருக்கிறேன். இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.