அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சப்லென்கா
Sep 10 2025
10

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் போட்டியான அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று அதி காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலராசின் சபலென்கா, தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள உள்ளூர் வீராங்கனையான அனீஸி மோவா பலப்பரீட்சை நடத்தினர். நடப்பு சாம்பியனான சப்லென்கா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்துடன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். குறிப்பாக சப்லென்காவுக்கு இது 4ஆவது கிராண்ட்ஸ்லாம் (2024, 2025 - அமெரிக்கா) பட்டம் ஆகும். இதற்கு முன் இதற்கு முன் 2023, 2024ஆம் ஆண்டு களில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றி இருந்தார். அதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 2ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் கோப்பை யை நழுவவிட்டுள்ளார் அமெரிக்காவின் அனீஸிமோவா. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் டென் னிஸ் தொடரில் அனீஸிமோவா, போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்கிடம் கோப்பையை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.44 கோடி அள்ளிய சப்லென்கா
சாம்பியன் பட்டம் வென்ற சப்லென்கா ரூ.44 கோடி பரிசுத்தொகையை அள்ளி யுள்ளார். அதே போல இரண்டாம் பிடித்த அனீஸிமோவா ரூ.22 கோடி யும் பரிசுத்தொகையை வென்றார். அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட்ஸ் சுற்றுகளில் வெளியேறியவர்க ளுக்கும் குறிப்பிட்ட அளவு பரி சுத்தொகை வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?