இலையுதிர் மரங்கள் !

இலையுதிர் மரங்கள் !

கவிஞர் இரா .இரவி !


உதிரும் இலைகளுக்காக மரங்கள் 

ஒருபோதும் வருந்துவதே இல்லை !


பச்சையம் மறைந்து காய்ந்தாலும் 

படபடப்பு என்றும் வருவதில்லை !


இழப்புகளுக்காக கவலை கொள்வதில்லை 

இருப்பை தக்க வைத்து நிமிரும் !


இலைகளை காற்றும் உதிர்ப்பதுண்டு

இலைகள் தானாகவும் உதிர்வதுண்டு !


போனால் போகட்டும் போடா என்ற 

பாடல் மனநிலையே மரங்களுக்கு !


மழை வந்தால் உடன் துளிர்க்கும் 

மறுபடியும் இலைகள் முளைக்கும் !


தன்னம்பிக்கை எப்போதும் இழப்பதில்லை 

தானாகவே மீண்டும் உறுதியுடன் துளிர்க்கும் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%