யானை !

யானை !

கவிஞர் இரா .இரவி !


உருவத்தில் பெரியது

உண்ணவில்லை அசைவம்

யானை !


கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !

கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும் !


உருவத்தில் பெரியது கண்கள் மட்டும் சிறியன !

உணவில் சைவம் மட்டுமே என்றும் உண்ணும் !


பூச்சிகள் செல்லாமலிருக்க காதுகளை ஆட்டும் !

பூவுலகில் அனைவரும் விரும்பிடும் அற்புத விலங்கு!


நின்றாலும் அழகு நடந்தாலும் அழகு !

நினைத்தாலும் அழகு பார்த்தாலும் அழகு !


மதம் பிடிக்காதவரை குழந்தையாக இருக்கும் !

மதம் பிடித்தாலோ மதம் பிடித்த மனிதனாகிவிடும் !


மிகப்பெரிய யானையை கோவில் பாகன்

மிக மோசமாக பிச்சை எடுக்க வைப்பான் !


வாங்கிய பணத்தை வாங்கிக் கொண்டு !

வாகனமாய் அமர்ந்து அங்குசத்தால் குத்துவான் !


பெரிய சங்கிலியை இழுத்து தோற்ற யானை !

சிறிய கயிற்றை இழுக்க முயற்சிக்கவில்லை !


காடுகளில் கூட்டமாக கூடி வாழும் !

கோவில்களில் தனியாக வாடி வாழும் !


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை !

குவளயத்தில் அனைவரும் அதிசயிக்கும் யானை !


மணி ஓசை வந்து விடும் முன்னே !

மணியாக நடந்து வரும் பின்னே !


நிலவும் யானையும் காதலியும் ஒன்று !

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%