அரியவகை ‘சிக்கிள் செல் அனீமியா’ நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிப்பு: சிஎஸ்ஐஆர் தகவல்
Jul 27 2025
10

காரைக்குடி:
பழங்குடி மக்களை தாக்கும் ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி கூறினார். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமத்தின் கீழ் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கர், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடி மக்களை ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரியவகை நோய் தாக்குகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சிஎஸ்ஐஆர் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டது.
தற்போது இந்நோயைக் கண்டறிந்து, 20 நிமிடங்களில் முடிவை அறிவிக்கக்கூடிய ‘பிசிஆர்’ தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சொட்டு ரத்தம் மூலம் நோயைக் கண்டறிய முடியும். இந்த கருவியை உருவாக்கக்கூடிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன.
ஓரிரு மாதங்களில் அரசு மின்னணு சந்தையான ‘ஜெம்’ சந்தையில் இந்தக் கருவி விற்பனைக்கு வரும். மேலும், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது, உடலில் உள்ள குறைபாடான ஜீனை திருத்தி, மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து தேவையின்றி வாழலாம்.
ரூ.50 லட்சம் செலவில்... அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு ரூ.28 கோடி செலவாகும் என்ற நிலையில், அதை ரூ.50 லட்சம் செலவில் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சிகிச்சையை பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக அளிக்க முடியும். இது இந்திய மருத்துவத் துறையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?