ஏவி.மெய்யப்ப செட்டியார் மறைவுக்குப் பின் சகோதரர்களோடு இணைந்து இவர் தயாரித்த படம் முரட்டுக்காளை. தந்தையின் விருப்பத்தை சொல்லி ரஜினியை வைத்து தயாரித்த முதல் படம். ஜெய்சங்கர் இவர் சொன்னதன் பேரில் வில்லனாக நடிக்க சம்மதித்தார். அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த ரஜினி தனக்கு இணையாக விளம்பரம் போஸ்டர்களிலும் ஜெய்சங்கருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.
முந்தானை முடிச்சு படத்திற்காக முதன் முதலாக பாம்குரோவ் ஹோட்டலில் அறை புக் செய்து கதை கேட்டாராம்.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கார்திக் தயங்கியபோது அடுத்த படமாக "நல்ல தம்பி" யில் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.
எம்.ஜி.ஆர் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்ட படம் தான் கமல் நடிப்பில் வெளியான" சகலகலா வல்லவன்" என்றும்
சிவாஜி நடித்த
" ஹிட்லர் உமாநாத்" படத்தின் ரீமேக் தான் ரஜினி நடித்த "நல்லவனுக்கு நல்லவன்" என்றும் குறிப்பிட்டார்.
AVM சரவணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலுடன்😭
நன்றி : AVM 60 நூலில் இருந்து
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?