கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள் இயக்க தரச் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள் இயக்க தரச் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு


சென்னை: கேளிக்கை பூங்​காக்​களில் பெருஞ்​சக்​கரங்​கள், பயணி​யர் விசைச் சக்​கரங்​கள் இயக்​கு​வதற்​கு, இந்​திய தர நிர்ணய கழகத்​தின் தரச்​சான்​றிதழை கட்​டாய​மாக்கி தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.


இதுதொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பெருஞ்​சக்​கரம், பயணி​கள் விசைச் சக்​கரம் (Giant/Ferris wheels) என்​பது மக்​களுக்கு மகிழ்​வூட்​டும் மிகப் பெரிய கட்​டமைப்​பு​களாகும். இவை கேளிக்கை பூங்​காக்​கள் போன்ற இடங்​களில் மட்​டுமின்​றி, கோயில் திரு​விழாக்​கள் மற்​றும் பொருட்​காட்சி போன்ற தற்​காலிக அமைப்​பு​களி​லும் இயக்​கப்​படு​கின்​றன.


அண்​மை​யில், பெருஞ்​சக்​கரம் உள்​ளிட்ட கேளிக்கை இயந்​திரங்​களில் சில விபத்து தகவல்​கள் பதி​வாகி​யுள்​ளன. எனவே, மக்​களின் பாது​காப்பை உறு​திப்​படுத்த, ஒருங்​கிணைந்த பாது​காப்பு வழி​காட்​டு​தல் தேவை​யாக உள்​ளதை கருத்​தில் கொண்​டு, விபத்​துக்​களை தடுப்​ப​தற்​காக நிலை​யான அமைப்பு மற்​றும் தற்​காலிக அமைப்​பு​களின் பெருஞ்​சக்​கரம், கேளிக்​கைப் பூங்கா நிர்​வாகி​கள், சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள், இந்​திய தரநிர்ணய கழக அதி​காரி​கள் உள்​ளிட்ட சம்​பந்​தப்​பட்ட பங்​கு​தா​ரர்​களின் கூட்​டம் கடந்த ஜூன் மாதம் நடை​பெற்​றது.



அக்​கூட்​டத்​தில் பெறப்​பட்ட கருத்​துக்​களை கருத்​தில் கொண்டு பெருஞ்​சக்​கரம், பயணி​கள் விசைச் சக்​கரம் இயக்​கத்​திற்​கான நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இதற்​கான அரசாணையை சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் துறை, கடந்த செப். 29-ம் தேதி வெளி​யிட்​டது.


எனவே, இந்த அரசாணை வெளி​யிடப்​பட்ட ஆறு மாதத்​துக்​குள் தற்​போது இயங்​கிவரும் கேளிக்கை பூங்​காக்​கள் நிலை​யான அமைப்​பு​களில் பெருஞ்​சக்​கரம், பயணி​கள் விசைச் சக்​கரம் இயக்​கு​வதற்கு இந்​திய தர நிர்ணய கழகத்​தின் தரச்​சான்​றிதழ் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இச்சான்றிதழை இணை​ய​வழி​யில் விண்​ணப்​பிக்​கும் முறையை தமிழ்​நாடு மின்​-ஆளுமை முகமை​யுடன் இணைந்து செயல்​படுத்​து​மாறு சுற்​றுலா துறை இயக்​குநருக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%