செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு



சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​படு​கின்​றன. அந்​தவகை​யில், 5 விரைவு ரயில்​களில் தற்​காலிக​மாக கூடு​தல் பெட்​டிகள் இணைந்​து, இயக்​கப்பட உள்​ளன.


இதன்​படி, தாம்​பரம் - செங்​கோட்டை இடையே இயக்​கப்​படும் சிலம்பு அதி​விரைவு ரயி​லில் தற்​காலிக​மாக 7 பெட்​டிகள் இணைக்​கப்பட உள்​ளன. அதாவது, தலா ஒரு ஏசி 2 அடுக்கு மற்​றும் இரண்​டாம் வகுப்பு பொதுப் பெட்​டி​யும், இரண்டு மூன்​றடுக்கு ஏசி பெட்​டிகளும், 3 இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளும் என 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தாம்​பரத்​தில் இருந்து இயக்​கப்​படும் ரயி​லில் நவ.1-ம் தேதி முதலும், செங்​கோட்​டை​யில் இருந்து இயக்​கப்​படும் ரயி​லில் நவ.2-ம் தேதி முதலும் கூடு​தல் பெட்​டிகள் இணைக்​கப்​பட​வுள்​ளன.


தாம்​பரம் - நாகர்​கோ​வில் இடையே இயக்​கப்​படும் விரைவு ரயி​லில் தலா ஒரு ஏசி இரண்​டடுக்கு மற்​றும் ஒரு பொதுப் பெட்​டி​யும், இரண்டு மூன்​றடுக்கு ஏசி பெட்​டிகளும், 3 இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளும் கூடு​தலாக இணைத்து இயக்​கப்பட உள்​ளன. தாம்​பரத்​தில் இருந்து புறப்​படும் ரயி​லில் நவ.2-ம் தேதி முதலும், நாகர்​கோ​விலில் இருந்து நவ.3-ம் தேதி முதலும் இணைத்து இயக்​கப்பட உள்​ளன.



சென்னை சென்ட்​ரல் - திரு​வனந்​த​புரம் சென்ட்​ரல் இடையே இயக்​கப்​படும் அதி​விரைவு ரயி​லில் ஒரு இரண்​டடுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்​கப்பட உள்​ளன. சென்னை சென்ட்​ரலில் இருந்து புறப்​படும் ரயி​லில் நவ.3-ம் தேதி முதலும், திரு​வனந்​த​புரம் சென்ட்​ரலில் இருந்து புறப்​படும் ரயி​லில் நவ.4-ம் தேதி முதலும் இணைக்​கப்பட உள்​ளன.


இதுத​விர, சென்னை சென்ட்​ரல் - ஆலப்​புழா இடையே இயக்​கப்​படும் அதிவிரைவு ரயில், கோயம்​புத்​தூர் - ராமேசுவரம் இடையே இயக்​கப்​படும் ரயில் உள்​ளிட்ட ரயில்​களில் கூடு​தல் பெட்டி இணைக்​கப்பட உள்​ளது. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக் குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%