தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்: உச்ச நீதிமன்றம்

தன் மீதான தாக்குதல் வழக்கை புறக்கணிக்க கவாய் விருப்பம்: உச்ச நீதிமன்றம்



புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அறையில் நிகழ்ந்த தாக்குதலை அவர் புறக்கணிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக கடந்த 6-ம் தேதி கூடியபோது, வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். இதன் பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.


இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் செயலை புறக்கணிப்பதே அதற்குரிய அவமதிப்பு. இவ்விஷயத்தில் நீதிமன்றம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நிலைமையை மேலும் மோசமாக்கும். நீதி நிர்வாக அமைப்பில் எந்த பங்கும் வகிக்காத ராகேஷ் கிஷோரின் செயலின் ஆயுளை நீட்டிக்கும்.


மேலும், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த விவகாரத்தை தங்களின் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள். எனவே, இச்சம்பவம் இயல்பாக மறக்கப்படுவதே சரியாக இருக்கும். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பெருந்தன்மையுடன் அவரை மன்னித்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.


“தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளபோது அது குறித்து வேறு ஒரு அமர்வு விசாரிக்க வேண்டுமா அல்லது இது அட்டர்னி ஜெனரலின் பொறுப்பா? நீதிமன்றத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை செய்தியாக வெளியிடுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படுவது குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும். மேலும், நீதிமன்ற அறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்” என நீதிபதி ஜோய்மால்யா பக்சி தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%