புதுடெல்லி: டெலாய்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெலாய்ட்டின் முந்தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதிகம்.
தேவை மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் வளர்ச்சி சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரவே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு டெலாய்ட் தெரிவித்துள்ளது.
சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது
பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணிக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட சிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதையடுத்து, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?