(குறள்வெண்
செந்துறை)
தமிழர் திருநாள்
பொங்கலாகும்
தக்க பெருநாள்
பொங்கலாகும்!
கமழும் விழாவே
பொங்கலாகும்
காணும் பொங்கல்
திருவிழாவே!
மஞ்சள் கரும்புப்
பச்சரிசி
மாண்பாய்க் காணும்
பொங்கலாகும்!
நெஞ்சம் இனிக்கும்
பொங்கலாகும்
நேர்மைத் தூய்மைப்
பொங்கலாகும்!
மழலை முதலாய்
மூத்தோர்க்கு
மகிழ்ச்சி அளிக்கும்
பொங்கலாகும்!
அழகுப் பொங்கல்
எல்லார்க்கும்
அன்பைப் பொழியும்
பொங்கலாகும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%