வானத்திலிருந்து பொழிகின்ற
மழையைப் போல ,
பசுவின் மடியிலிருந்து
கறக்கின்ற பாலைப் போல ,
பத்து மாதம் சுமந்த தாயின்
நேசம் போல ,
உண்மையான நட்பும் தூய்மையானது .
இரத்தபந்தம் இல்லையென்றாலும்
சொந்தமாக தெரியும்
உயர்வு தாழ்வு வந்த போதும்
உன்னை விட்டு கொடுத்து பேசாது
அவன் ,அவள் என இனம் கடந்தும்
மதம் ,சாதி என அடையாளம் கடந்தும்
பேசுகின்ற மொழி கடந்தும்
நேசிக்கும் பேரன்பே
உண்மையான நட்பு .
ஒரு உண்மையான நட்பு
ஆயிரம் உறவுகளை விட மேலானது ..
இவ்வையகத்தில் சில இடங்களில்
காற்று இல்லாமல் இருக்கலாம்
அட அந்த காதல் இல்லாமலும் இருக்கலாம் -ஆனால்
நட்பில்லாமல் உலகேது .
உயிர்கள் அனைத்துக்குமே கடவுளே துணை
எனக்கோ நட்பே துணை !
நௌஷாத் கான் .லி
கும்பகோணம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?