நாற்காலி

நாற்காலி


வீட்டில் அறையின் ஓரத்தில் அமைதியால் நிற்கும் 

யார் வந்து அமர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும் 

முதியவர் நினைவில் பழைய நண்பனாய் 

இருப்பதுடன் மழலைகளில் விளையாட்டில் பங்கு கொள்ளும்

ஓய்வு கொடுக்கும் ஒரு உன்னத நண்பன்

கனவுகள் இல்லா உலகத்தில் வாழ்பவன் 

ஒருநாள் மரமாக இருந்ததை என்றுமே நினைக்காதவன் 

இன்று நாற்காலியாக மாறியதில் மகிழ்ச்சியும் அடையாதவன்.

காலத்தில் என்ன மாற்றங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்பவன்

எளிய வடிவில் அனைவருக்கும் எளிதாக கிடைப்பவன்


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%