
பழனி, ஆக. 12 –
பழனியை அடுத்த தும்பலபட்டியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த சரவணன் (வயது 23) என்ற வாலிபரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் காவல்துறையின் விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தள்ளிவிட்டதால் அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது.
தும்பலபட்டியைச் சேர்ந்த சரவணன், அதே ஊரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு, அவர் காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலை செங்கல் சூளை பகுதியில் காதில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இதனையடுத்து, சரவணனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?