பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை

பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை



புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.


பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் போலீ​ஸார் பல இடங்​களில் தேடி வந்​தனர்.


இந்​நிலை​யில் டெல்லி உள்ள ரோஹினி பகு​தி​யில் பகதூர் ஷா மார்க் என்ற இடத்​தில் இந்த கும்​பல் பதுங்​கி​யிருப்​ப​தாக பிஹார் போலீ​ஸா​ருக்கு தகவல் கிடைத்​தது. இவர்​களை பிடிக்க டெல்லி போலீ​ஸாரின் உதவியை பிஹார் போலீ​ஸார் நாடினர்.


இந்​நிலை​யில் நேற்று அதி​காலை 2.20 மணி​யள​வில் பகதூர் ஷா மார்க் பகு​தி​யில் சிக்மா கும்​பலை சேர்ந்த ரவுடிகள் பதுங்​கி​யிருந்த இடத்தை டெல்லி மற்​றும் பிஹார் போலீ​ஸார் சுற்றி வளைத்​தனர்.


அப்​போது சிக்மா கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டனர். போலீ​ஸார் நடத்​திய பதில் தாக்​குதலில் சிக்மா கும்​பலைச் சேர்ந்த 4 பேரும் சுடப்​பட்​டனர். படு​கா​யம் அடைந்த இவர்​களை போலீ​ஸார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர்​கள் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.


இது டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற மிகப் பெரிய என்​க​வுன்​ட்டர் ஆகும். உயி​ரிழந்த குற்​ற​வாளி​கள் குறித்து பிஹார் போலீ​ஸார் கூறுகை​யில், ”பிஹாரில் தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலுக்கு வந்​த​ பின்​பும், சிக்மா கும்​பல் ஒரு​வரை கொலை செய்​தனர். இந்த கும்​பலின் தலை​வ​னாக செயல்​பட்ட ரஞ்​சன் பதக் பற்றி தகவல் அளிப்​போருக்கு ரூ.25,000 பரிசு அளிக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.


இந்த கும்​பல் தொடர் குற்​றங்​களில் ஈடு​பட்டு டெல்​லிக்கு தப்​பிச் சென்​றனர். அவர்​களை சுற்றி வளைத்​த​போது துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதனால் பதில் தாக்​குதல்​ நடத்​தினோம்​” என்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%