பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: 70 சதவீதம் தீக்காயமடைந்த ஒடிசா சிறுமி

பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: 70 சதவீதம் தீக்காயமடைந்த ஒடிசா சிறுமி

புவனேஸ்​வர்:

ஒடி​சா​வின் புரி மாவட்​டம், பாலங்கா அரு​கே​யுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்​தினம் வீட்​டுக்கு அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது மோட்​டார் சைக்​கிள்​களில் வந்த 3 மர்ம நபர்​கள், சிறுமியை வலுக்​கட்​டாய​மாக அழைத்​துச் சென்​று அவர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து எரித்​தனர்.


சிறுமி​யின் அலறல் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்​தனர். இதை பார்த்​ததும் மர்ம நபர்​கள் தப்​பிச் சென்​று​விட்​டனர். பலத்த தீக்காயமடைந்த சிறுமியை மீட்ட கிராம மக்​கள், பிப்​பிலி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். சுமார் 70 சதவீதம் தீக்​கா​யம் அடைந்​துள்ள அவரின் உடல்​நிலை மோசமடைந்​தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு ஆம்​புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் சிறுமி அனு​ம​திக்​கப்​பட்​டார்.


இதுகுறித்து ஒடிசா போலீ​ஸார் கூறிய​தாவது: சிறுமிக்கு தீ வைத்த மர்ம நபர்​கள் யார் என்​பது தெரிய​வில்​லை. சிசிடிவி கேமராக்களின் உதவி​யுடன் குற்​ற​வாளி​களை தீவிர​மாக தேடி வரு​கிறோம். இந்த வழக்கை முதல்​வர் மோகன் நேரடி​யாக கண்​காணிப்​ப​தால் தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது.


புவனேஸ்​வர் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் இருந்து சிறுமியை விமான நிலை​யம் அழைத்​துச் செல்ல சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்​டன. போக்​கு​வரத்து முழு​மை​யாக நிறுத்​தப்​பட்டு 10 நிமிடங்​களில் விமான நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அங்​கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்​லிக்கு அவர் கொண்டு செல்​லப்​பட்​டார். அவரோடு 15 பேர் அடங்​கிய மருத்​து​வக் குழு​வும் சென்றது. சிறுமி​யின் குடும்​பத்​தினரும் உடன் சென்றுள்ளனர்​. இவ்​வாறு போலீஸார் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%