போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு

போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு



சென்னை: ​போதைப் பொருள் வாங்கி பயன்​படுத்​திய விவ​காரத்​தில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசா​ரணைக்கு ஆஜராக அமலாக்​கத் துறை உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் பாரில் கடந்தமே மாதம் இருதரப்​பினரிடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக அஜய் வாண்​டை​யார், ரவுடி சுனாமி சேதுப​தி, அதி​முக நிர்​வாகி பிர​சாத், நாகேந்​திர சேதுபதி உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.


பிர​சாத்​திடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், சினிமா நடிகர்​களுக்கு போதைப் பொருள் விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​தது. இது போலீ​ஸாரிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. விசா​ரணை​யில் அவர் கொடுத்த தகவலின்​பேரில், சேலம் மாவட்​டம் சங்​ககிரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் (எ) பிரிட்​டோ), மேற்கு ஆப்​பரிக்​காவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை ஜூன் 17-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்​கள் வாங்கி பயன்​படுத்தி வந்​தது தெரிய​வந்​தது.


இது தொடர்​பான வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை ஜூன் 23-ம் தேதி இரவு நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், சென்னை மயி​லாப்​பூரைச் சேர்ந்த பிர​சாத் என்​பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்​கம் ஏற்​பட்​ட​தாக போலீ​ஸாரிடம் வாக்​குமூலம் அளித்​தார். மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணகுமார் போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக​வும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்​றிய​தாக​வும் தெரி​வித்து இருந்​தார்.


இதையடுத்​து, அவரை​யும், சப்​ளை​யர் கெவினை​யும் ஜூன்​.27-ம் தேதி போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் 22-க்​கும் மேற்​பட்​டோரை கைது செய்த போலீ​ஸார், அவர்​களிடம் இருந்து பல்​வேறு வகையி​லான போதைப் பொருட்​களை பறி​முதல் செய்​தனர். இதையடுத்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்ட நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோ​ருக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.


இந்த வழக்​கில் வெளி​நாட்டு கும்​பலுடன் பலருக்கு தொடர்பு இருப்​ப​தால், இதில் பல லட்​சம் ரூபாய் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்​ளிடோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தடுப்பு சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News