மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்

பதுமி:

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார்.


ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான சர்​வ​தேச மாஸ்​ட​ரான திவ்யா தேஷ்​முக்​குடன் மோதி​னார். இரண்டு கிளாசிக்​கல் ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​ததை தொடர்ந்து வெற்​றி​யாளரை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டம் இன்று நடை​பெற்​றது.


இதில் முதல் ஆட்​டத்​தில் வெள்ளை நிற காய்​களு​டன் திவ்யா தேஷ்​முக் விளை​யாடி​னார். இந்த ஆட்​ட​மும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய திவ்யா தேஷ்​முக், 2 முறை உலக ரேப்​பிடு சாம்​பிய​னான கோனேரு ஹம்​பியை 2.5-1.5 என்ற கணக்​கில் வீழ்த்தி உலக சாம்​பியன் பட்​டம் வென்​றார். மகளிர் உலகக் கோப்​பை​யில் இந்​திய வீராங்​கனை சாம்​பியன் பட்​டம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும். உலக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள அதே நேரத்​தில் கிராண்ட் மாஸ்​டர் அந்​தஸ்​தை​யும் பெற்​றுள்​ளார் நாக்​பூரை சேர்ந்த திவ்யா தேஷ்​முக். இந்​திய வீராங்​க​னை​களில் கிராண்ட் மாஸ்​டர் பட்​டம் வெல்​லும் 4-வது நபர் திவ்யா தேஷ்​முக் ஆவார். இதற்கு முன்​னர் கோனேரு ஹம்​பி, ஹரிகா துரோணவள்​ளி, ஆர்​.வைஷாலி ஆகியோ​ரும் கிராண்ட் மாஸ்​ட​ராகி இருந்​தனர். உலக அளவில் 88-வது மகளிர் கிராண்ட் மாஸ்​டர் என்ற பெரு​மை​யை​யும் திவ்யா தேஷ் முக் பெற்​றுள்​ளார்.


உலக சாம்​பிய​னான திவ்யா தேஷ்​முக்​கும், 2-வது இடம் பிடித்த கோனேரு ஹம்​பி​யும் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள கேண்​டிடேட்ஸ் தொடருக்கு நேரடி​யாக தகுதி பெற்​றுள்​ளனர். 8 பேர் கலந்து கொள்​ளும் கேண்​டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான சீனா​வின் வென்​ஜுன் ஜூவுக்கு எதி​ராக போட்​டி​யிடு​பவர் தேர்வு செய்​யப்​படு​வார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%