news Breaking News
clock

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு


 

சநாதானம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ``வட மாநிலங்களில் வேண்டுமென்றால், அவர்கள் நினைக்கும் காரியங்கள் ஈடேறலாம். தமிழகத்தைப் பொருத்தவரை, ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறுகிற ஆட்சி.


நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாகத்தான் இருக்கும். இது திராவிட மண். இங்கு மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் பேணிக் காக்கப்படும். அனைத்துத் தரப்பட்ட மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற மண் இது.


எந்தவொரு பொருளையும் மையப்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். சமாதானம் என்பது அனைத்து நிலையிலும் மக்களைச் சமன்படுத்துவது.


சநாதனம், மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துகிறபோது, அதனை எதிர்க்கிற அரசு இந்த அரசு’’ என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News