மதுரை, அக். 17 - மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்தின் ராஜினாமா மாமன்றக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த் அக்டோபர் 15 அன்று தனது மேயர் பதவியை ராஜி னாமா செய்தார். இதுதொடர்பான கடி தத்தை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனிடம் அவர் வழங்கி னார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை (அக். 17) அன்று துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த்தின் ராஜினாமா தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?