news Breaking News
clock

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்) 19.10.25

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்) 19.10.25


இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் சர்க்கரை நோயை குணமாக்குவதோடு ஆயிலை நீடித்தெருகின்ற ஆராக்கீரை பற்றிய தகவல் நிறைந்த கட்டுரை படித்தேன் சர்க்கரையை நோயை குணமாக்குவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்ற அருமருந்தாக ஆராகீரை உள்ளது என்கிற தகவலை அறிய வைத்தது. இதுபோல மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களைப் பற்றிய தகவலை தினமும் கட்டுரையாக வெளியிட்டு வருவதன் மூலம் எந்த ஒரு நாளிதழும் செய்யாத சாதனையை தமிழ்நாடு பேப்பர் செய்து வருகிறது. இன்று எதில் சிறுகதை பகுதியில் கேபி ஜனார்த்தன் மற்றும் முகில் தினகரன் ஆகியோருடைய சிறுகதைகள் சிறப்பாக இருந்தன. கள்ளப்பா தொடர் எழுதிய எழுத்தாளர் ரமேஷ் அவர்கள் இந்த கதைக்கான கருகிடைத்ததற்கான தகவலை சொன்ன விதம் அருமை...பாராட்டுக்கள். இன்றைய நாளிதழில் சிடி செய்திகள் பக்கத்தில் டீசல்,பைசன் இரண்டு படங்களுக்கான விமர்சனம் நடுநிலையோடு உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனமாக அமைந்திருந்தது. இன்றைய நூல் பிரசாதம் பகுதியில் நல ஞான பண்டிதன் அவர்கள் எழுதிய ஞானக்கிருக்கன் என்ற நூலின் மதிப்புரை நூலை ஒரு தடவை எப்படியாவது வாங்கி படித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிற வகையிலே அமைந்து இருந்தது .ஒவ்வொரு நாளும் வருகிற நூல் விமர்சனம் அந்த நூலைப் பற்றி வாசகர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.பாராட்டுகள்.



கவி-வெண்ணிலவன்

எழுத்தாளர்

மணமேல்குடி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News