tamilnadu epaper

இது கடவுள்கள் உலவிய களம்

இது கடவுள்கள் உலவிய களம்

ஆளுயர தேசியக்கொடியை

கம்பீரமாக 

ஏந்தியவாறே

சென்றுக் கொண்டிருந்தாள் 

பாரதமாதா;


“என் எழுத்தாணியை நீ வைத்துக்கொள்;


உன் கொடியை எனக்கு தா” என்று

கெஞ்சியபடியே

பின் தொடர்ந்தார்

திருவள்ளுவர்;


அவசரமாய் 

மறுத்து மேலும் 

சில அடி 

நடக்கையில் 


இடுப்பு சேலை நழுவ,

இப்போது


பாரத மாதாவின் தேசியக்கொடி 

ஆதிவாசியின் கையில்;


பேரழகுடன் 

வலம் வந்த 

ஓர் இளவரசியின்


புரளும் 

ஆடையோரங்களை 

ஆளுக்கொருப் பக்கமாக 

பிடித்தவாறே வந்தனர்


அரங்கத்திற்குள்

ஒரு கரடியும் 

மனிதக் குரங்கும் ;


அன்னை 

தெரசாவும் பாரதியாரும்

அளாவளாவிக்கொண்டிருந்தனர்

ஒருப்புறமாய்;


இந்தக்

களேபரத்தில் 

நேரு மாமாவின் சட்டைப்பையை

அ்லங்கரித்த ஒற்றை ரோஜாப்பூ


ஒரு ராணுவ வீரரின் காலணியின்

கீழ் நசுங்கி கிடந்ததை 

ஒருவரும் கவனிக்கவில்லை’!


ஆனந்தமாக 

நடந்து முடிந்தது 

அந்த சிறுவர் பள்ளியின் 

மாறுவேடப் போட்டி நிகழ்ச்சி;

இடுப்பில் 

அமர்ந்து வந்த 

என்  கிருஷ்ணனின்

கொண்டை மயிலிறகு 

என் கன்னங்களில் சித்திரம் வரைய

வீடு திரும்புகையில் 

மனமெங்கும்

மகிழ்வும் 

ஏதோ ஓர்

நெகிழ்வும் 

நிலைத்திருந்தது நிஜம்;


-ரேணுகாசுந்தரம்