பள்ளிப் பருவத்தில்
அன்புடன் தோழமை
உள்ளத்தில் நிற்கும்
எப்போதும் தலைதூக்கும்
துள்ளி விளையாடும்
அன்புப் பரிமாற்றங்கள்
சொல்லாத வார்த்தைகள்
சுடர்விடும் நெஞ்சுக்குள்
மெல்ல அசைபோடும்
மிருதுவாய் துளிர்விடும்
நல்லதாம் காதல்போல்
நண்பர்கள் இருவருக்குள்!
ஒருவருக் கொருவர்
உதவியாய் நாமிருப்போம்
இருளுக்கு ஒளிதந்து
இணையாய் நாமிருப்போம்
இருவரையும் இணைக்கும்
இனிதான தோழமை
இருவரின் பாதைகள்
பிரிந்தே போனாலும்
வரும்நாளில் ஒன்றாய்
மறுபடிச் சேர்ந்திருப்போம்!
வாலிப வயதினில்
வந்த நட்பில்
வேலைசெய் இடத்தில்
விளைந்த நட்பில்
அணிசெய்யும் தோழமையில்
அமைவதும் ஓரிருவர்
இணைவோம் தோழமை
என்னும் பண்பால்!!!
-வைரமணி
சென்னை