tamilnadu epaper

உயர்ந்த எண்ணங்கள்

உயர்ந்த   எண்ணங்கள்

இனிமை ஒன்றே என்றும் உங்களை நெருங்கட்டும்

துணிவை மனதில் ஏற்கும் அனுபவம் வளரட்டும்

கற்ற நற்கல்வியை பற்றிட நல்லெண்ணம் பெருகட்டும்

வாட்டும் துன்பம் கண்டு அதை இல்லாதாக்கிடுங்கள்

தூக்கம் உம்மைத் தாக்கும் 
துச்சமெனக் எதிர்கொள்ளுங்கள்

ஏக்கம் என்றும் தீர படித்தே உழைத்திடுங்கள்

முப்பெரும் சக்திகள் சேர்ந்தே எப்போதும் கிடைக்கட்டும்

நாளும் அறிவை அடைந்திட பெற்றோரைத் துதியுங்கள்..!

                 - துரை சேகர்
                   கோவை.