எங்கள் ஊர் ஏர்வாடியானது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 38 கிமீ தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; திருக்குறுங்குடியிலிருந்து 6 கிமீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் ஏர்வாடி பேரூராட்சி உள்ளது.பண்டைய கால ஏர்வாடி மக்கள் விவசாயம், வணிகம் மற்றும் நிதி மேம்பாடுகளில் சிறந்து விளங்கினர். பழக்கால ஏர்வாடி மக்கள் பாண்டிய மன்னன் குலசேகரின் இராணுவத்தில் இணைந்து சேர மன்னனுக்கு எதிராக பணகுடியில் நடந்த போரில் பங்கேற்றனர். ஏர்வாடி புளியஞ்சுவனம் என்றும் அழைக்கப்படுகிறது. புளியஞ்சுவனம் என்ற பெயரில் ஒரு கல்வெட்டும் ஏர்வாடி கைகாட்டிக்கு அருகில் உள்ளது.8.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் ஏர் உழும்போது பாடிக்கொண்டு உழுததால் ஏர்பாடி என்பது ஏர்வாடியாக மருவியது என்பர். ஏர்வாடி என்னும் இந்த சொல் "ஏர்" "கலப்பை" என்னும் என்னும் சொல்லில் இருந்தது வந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்திலும் ஏர்வாடி என்றொரு கிராமம் உள்ளது
எங்கள் ஏர்வாடியின் நடுவே நம்பி ஆறு பாய்கிறது. தற்பொழுது உள்ள தட்ப வெட்ப காரணங்களினால் ஆற்றில் நீர் வற்றி காணபடுகிறது. நம்பியாற்றை வைத்து ஏர்வாடி வடக்கு, ஏர்வாடி தெற்கு என்று பிரிக்கப்படுகிறது. இவ்வூரின் ஒவ்வொரு தெருக்களும் நம்பியாற்றுடன் முடிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி நகரை சுற்றி பல சிறு கிராமங்கள் உள்ளது. ஏர்வாடியின் சுற்றுப்பகுதி பல மலைகளும், குளங்களும், விவசாய நிலங்களும், வாழைத் தோட்டங்களும், தென்னத்தோட்டங்களும் அமைக்கப்பெற்றுள்ளது.
திருநெல்வேலி நகரத்தில் இருந்து ஏறத்தாழ 38 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூரில் ரயில் நிலையம் ஏர்வாடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாக இருகின்றது. சாலை வழியாக ஏர்வாடி சென்னையுடனும் (670 கிலோ மீட்டர்), மதுரையுடனும்(205 கிலோ மீட்டர்) இன்னும் இன்ன பிற நகரங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வூரின் அருகாமையில் உள்ள விமான நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவில் திருவனந்தபுறத்தில் இருகின்றது.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளும், களக்காடு, நாங்குநேரி ஆகிய 2 யூனியன் பகுதிகளும் அடங்கி உள்ளன. இங்கு களக்காடு புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், நாங்குநேரி ஸ்ரீவான மாமலை பெருமாள் கோவில், திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில், களக்காடு சத்தியவாகீஸ்வரர்- கோமதி அம்பாள் கோவில், ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளன.களக்காடு வடக்கு பச்சையாறு அணை, திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணைகள் நாங்குநேரி தொகுதியை வளம் மிக்கதாக வைத்துள்ளன. இதுதவிர களக்காடு பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால், திருக்குறுங்குடி நம்பி ஆறு உள்ளிட்டவை முக்கிய நதிகளாக ஓடுகின்றன.
ஏர்வாடி பேரூராட்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளின் விவரம்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இராணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி,
அல்-ஹுதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி,
அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி,
நெம்ஸ் பள்ளி, மீனாட்சிபுரம்,
அரசு பள்ளிகள்:
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
அரசு நடுநிலைப் பள்ளி,
அரசு தொடக்கப் பள்ளிகள் 2,
இங்கு பலதரப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானவை கிரிக்கெட் மற்றும் கைபந்து. கைபந்து விளையாட்டை இவர்களது ஊர் விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இது போக கிராமத்து விளையாட்டுகளான கில்லி, கோலி, பம்பரம், கபடி ஆகியவை இந்த ஊர் சிறுவர்களிடையே பிரசித்தம். கில்லி விளையாட்டினை இவ்வூரில் குச்சி-கம்பு என்று அழைப்பார்கள்.
ஏர்வாடி முஸ்லிம், இந்து, கிறித்தவ மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு தலங்கள் உள்ளன.
பெருமாள் கோவில் திருகுரங்குடி - ஏர்வாடி பாதையில் அமைந்து இருக்கின்றது. இது போக ஹரிஹர சாஸ்த கோவிலும் பெரியநாயகி அம்மன் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. சந்தன மாரி முப்பிடாதி உச்சினிமாளி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த தெய்வங்கள் உள்ளன.
ஏர்வாடியில் உள்ள மசூதிகளில்
மேலமுஹல்லம் ஜும்மா பள்ளிவாசல்,
நடுமுஹல்லம் பீர் சாஹிப் பள்ளிவாசல்,
கீழமுஹல்லம் பள்ளிவாசல்,
பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசல்,
முஹைதீன் பள்ளிவாசல் மற்றும்
லெப்பைவளவு முகாம் பள்ளிவாசல் ,
மெயின் ரோடு பள்ளிவாசல் பிரசித்தி பெற்றவை.
தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்
இது போக சிறிய பள்ளிவாசல்களும், தர்காகளும் இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கந்தூரிகளும் சந்தன கூடு திருவிழாவும் நடைபெறுவது உண்டு.
ஏர்வாடியில் புனித ஜோசப் தேவாலயம் பிரசித்தம்.
திருவழுதீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் திருவழுதீஸ்வரர் என்றும், தாயார் பெரிய நாயகி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். வள்ளியூருக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் நம்பியாறு கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் 1600 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இந்த இடம் வீர ரவிவர்ம சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.
தாமிரபரணி மகாத்மியத்தின்படி, திருநெல்வேலி பகுதியில் உள்ள ஐந்து முக்கியமான சிவன் கோயில்கள் பஞ்ச ஆசன ஸ்தலங்களாகக் கருதப்பட்டன. இந்த கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் பஞ்ச ஆசன ஸ்தலங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
பெரும்பாலான கோயில்களில் முதன்மை தெய்வம் மற்றும் உற்சவர் சிலைகள் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்தக் கோயிலின் சிறப்பு இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதுதான். நந்தி, பலிபீடம் மற்றும் த்வஜஸ்தம்பம் ஆகியவை கருவறையை நோக்கியவாறு காணப்படுகின்றன. அன்னை வழிபாட்டில் முதன்மை பெறுகிறார். இந்த கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் நம்பியாறு ஆறு.
நம்பிராஜன்
வள்ளியூர்