பணம் படைத்தவனுக்கு பளிங்கு கல் மாளிகை./
பண்டாரம் பரதேசிக்கு
மனங்களே வீடு/
அரசியல்வாதிக்கு ஊருக்கு ஒரு பண்ணை வீடு /
நடுத்தர வர்க்க நாயகனுக்கு
வாழ்நாள் கனவே வீடு/
நம் பசி தீர்க்கும் விவசாயிக்கு ஓலைக்குடிசையே
மாளிகை/
அடித்தட்டு மக்களுக்கோ நடைபாதைகளே
நிரந்தர வீடு/
பல்லாயிரம் அடிகொண்ட
பங்களாவில் வாழும்
கோடீஸ்வரரே ஆனாலும் இறுதியில்
ஓய்வெடுப்பது
ஆறு அடி மன்னில்தான்,/
தகனம் செய்தால் கூட
மிஞ்சுவது கைப்பிடி
சாம்பல் மட்டுமே?
ஜனனத்திற்கும் –
மரணத்திற்கும் இடையில்
எத்தனை, எத்தனை வேடங்கள்?
“வாழ்க்கை “
எனும் நாடகத்தில்!?//
-கோபாலன் நாகநாதன்
சென்னை-33.