tamilnadu epaper

தேடித் தொலத்த கவிதை ஒன்று❤️

தேடித் தொலத்த கவிதை ஒன்று❤️

தொலைந்த எதைத் தேடுகிறேன் 
வழிநெடுக 
பூக்களின் இதழ்கள்❤️

தேடுவதில் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்க
எல்லாமே கிடைத்தாலும் இறுதியில் பூக்களின் இதழ்கள்❤️ 

பூக்களின் இதழ்களில்தான்
எத்தனை எத்தனை இதயங்கள் .. எல்லாமே என்னைத் 
தேடியவையா❤️

தேடலில் மட்டுமே எதுவும் கிடைக்கிறது ஆனால் எதுவுமே கிடைப்பது அரிதாக சில நேரங்களில் 
இல்லை என❤️

கிடைக்கும் என்று தான் தேடுகிறோம் ஆனால் கிடைக்காது என்று மனதார தெரிந்து கொண்டது தெரியாமல்❤️

தேடத்தேட வழி நிறைய
நிறைந்து வழிகிறது 
தேடலுக்கான விண்ணப்பங்களும் ஒரு கவிதையின் பெறுமுடிவும்❤️

ஜவஹர் பிரேம்குமார்❤️
பெரியகுளம்❤️