நெஞ்சுக்குள்ளே வச்சிருக்கேன்
நெதமும் நெனச்சிருக்கேன்
வயசுபுள்ள காத்திருக்கேன்
வாடாம பாத்துக்கய்யா
மல்லிகைப்பூ சூடியிருக்கேன்
மச்சானே வாருமய்யா
கன்னமும் செவந்திருக்கு
ஒன்னோட முத்தத்தாலே
காதலும் உண்டாச்சி
வெட்கமும் வந்திருச்சு
எம்மனச புரிஞ்சுக்கய்யா
என்னைத்தான் ஏத்துக்கய்யா
அரும்பு மீசக்காரா
கட்டழகு மேனிக்காரா
ஆத்தோரம் ஆலமரத்துல
ஊஞ்லொண்ணு கட்டுமய்யா
அந்திசாயும் நேரத்திலே
ஆனந்தமா ஆடலாமே
தோளிலே சாஞ்சிக்கிறேன்
மெல்லத்தான் அணைச்சுக்கய்யா
குதூகலமாகும் மனசு
வாலிப வயசு
மரிக்கொழுந்து வாசத்திலே மாமனவன் நேசத்திலே
வசியம் பண்ணி
போவதென்ன நில்லுமய்யா
வெள்ளக்கட்டி பேச்சுலதான்
உருகித்தான் போனேனே
பவுசு காட்டாதய்யா
பரிசந்தான் போடுமய்யா
கண்ணாலம் பண்ணிக்குவோம்
சந்தோசமா வாழ்ந்திடுவோம்
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்