ஆடு, மாடு மேய்ப்பதொன்றும் சுலபமான காரியமில்லை. அதிலும் பிரச்சினைகள் வரும் என்பதை பள்ளியைக் கட்டடித்து, ஊர் சுற்றும்
மாணவர்களுக்குப் புரியவைத்த,' பள்ளிக்கூடம் போகலாமா' சிறுகதை அருமை. கதாசிரியர் பிரபாகர் சுப்பையா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
பாலச்சந்தர் அவர்கள் எழுதிய, ' தாய் கிழவி தாய் கிழவி' சிறுகதை நல்ல காமெடி.
உழவாரப் பணி என்றால் என்ன? என்ற கட்டுரை மூலம் உழவாரப் பணி செய்தே சிவனருள் பெற்றவர் திருநாவுக்கரசர் என்றும், எவை எவை உழவாரப் பணிகள் என்றும் தெரிந்து கொண்டேன்.
-பார்வதி நாகமணி