செய்யாறு மே .7,
செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு வட்டாரத் தலைவர் நா. சண்முகம் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் க.சரவணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மோ. சிவக்குமார், முன்னாள் வட்டாரச் செயலாளார் கி. சரவணன், முன்னாள் வட்டாரத் தலைவர் கோ.புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.