சல்லி வேரின் உறுதியில்,
கல்லும் நெக்கு விட,
உயர்ந்து ஓங்கும்
தரு உரைக்கும்,
ஒரு மந்திரம்,
உறுதியான உழைப்பே,
உயர்வுக்கு உயிர் நாடி.
உயர்வில் நாட்டமுற்று,
அயர்வில்லாமல் முயல்வோன்
அடைவான்;
விண்ணகத்தின் உச்சி;
மண்ணகத்தின் ஆழம்;
வானவில்லையும்
நாணேற்றும் வலிமை.
சசிகலா விஸ்வநாதன்