நம்மிடம்
அன்பு பண்பு இருந்தால்
ஆகாத செயல்
உலகில் எதுவுமில்லை !
நம்மை எதிர்க்கும்
சக்தி எதுவுமில்லை
தன்னலம் விட்டுப் பார்
உன்நிலை உயரும்!
..
அன்பையும் பண்பையும்
நாளும் கடைபிடித்தால்
நம்மிடமே
அன்பு
மீண்டும் வந்தடையும்
வாழ்க்கையின் ஆதாரமே
அன்பு .... அன்பு ... அன்பு!
கவிஞர் பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை