tamilnadu epaper

அன்பே

அன்பே

யாரோ தூக்கி வீசி எறிந்த காகிதம்

காற்றில் மிதந்து 

என் காலடி நோக்கி வந்தது

எடுத்துப் பார்த்தேன்

அதில்

எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் எழுதிய கவிதையில்

உந்தன் பெயர் இருந்தது

வாசித்துப் பார்த்தேன்

ஆஹா

வாழ்தல் இனிதடி கண்ணே

எப்போதும்

உன் நினைவுகளில் !!!



-சுபஸ்ரீஸ்ரீராம்