tamilnadu epaper

அலங்காநல்லூர் இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை விழா

அலங்காநல்லூர் இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை விழா



அலங்காநல்லூர். மே.27.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் வேல் பூஜை வழிபாட்டு குழு மதுரை புறநகர் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் வேல்பூஜை மற்றும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த நிகழ்வில் முருகனின் திருவுருவப்படம், வேல் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தர்ம சாஸ்தா ஆலய நிர்வாகி ஏ.எல்.சீனிவாசன், இந்து முன்னணி மாநில செயலாளர் மத்திய அரசு வழக்கறிஞர் முத்துக்குமார், மற்றும் பாலசுப்பிரமணியன் திருக்கோவில் பாதயாத்திரை குழு தலைவர் 

ஜோதிவேலாயுதம், தொழிலதிபர் செல்வம், இந்து முன்னணி கோட்ட செயலாளர் கணேசன், ஐயப்ப பக்தர் டாக்டர் தனசேகரன், சிறப்புரை வழங்கினர். ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் ஒழிக்க பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இந்த கூட்டத்தில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி வேல் பூஜை வழிபாட்டுக் குழுவினர் செய்து இருந்தனர்