உப்புக் கடலை சாப்பிடுவதால் குறிப்பாக, இநில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களின் ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணவும் உதவுகிறது.
உப்பு கடலையின் நன்மைகள்:
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது:
உப்பு கடலை இன்சுலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு கடலை சாப்பிடலாம்.
மலச்சிக்கலுக்கு தீர்வு:
நார்ச்சத்துக்கள் நிறைந்த உப்புக்கடலை செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
எலும்புகள் வலிமையடையும்:
உப்பு கடலையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலிமையடைய உதவுகிறது.
இரத்த சோகைக்கு தீர்வு:
உப்பு கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு நல்ல தீர்வாகும்.
கலோரி குறைவாக, நார்ச்சத்து நிறைவாக:
உப்பு கடலையில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து நிறைவாகவும் உள்ளது, இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமைகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு:
உப்புக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
தேவையான அளவில் தினசரி உப்புக்கடலை சாப்பிடுங்கள்!
தகவல்
கோவில்பட்டி
செய்தியாளர்
கோ.சுரேஷ்குமார்.