tamilnadu epaper

எங்கள் ஊர் வேப்பனபள்ளி சிறப்புகள்

எங்கள் ஊர் வேப்பனபள்ளி சிறப்புகள்

 

இப்போது பரவலாக வேப்பனஹள்ளி என்று அழைக்கப்படும் எங்கள் ஊர் வேப்பனப்பள்ளியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய ஊராகும் இது வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராகவும்  உள்ளது

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. 

 

எங்கள்  ஊரின் பழமையான பெயராக வேப்பம் பள்ளி, செடில சமுத்திரம் ஆகியவை உள்ளன. கிருஷ்ணகிரி வட்டம் மேகலம்சின்னம் பள்ளியில் கிடைத்த 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் வேப்பம் பள்ளியான செடில சமுத்திரத்தை என்ற சொற்றொடரால் இந்த ஊர் குறிக்கப்பட்டுள்ளது. வேப்பம் பள்ளி என்பதில் உள்ள வேப்பம் என்ற சிறப்புக் கூறிலிருக்கும் மகரம் னகரமாக திரிந்து பிற்காலத்தில் மாறியுள்ளது

எங்கள் வேப்பனப்பள்ளி மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும்,[மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா் தேவைக்காக மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போது  குடிநீா் வழங்கல் செய்யப்பட்டு வருகிறது. 

 

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவை. பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இப்பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். 

 

இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விவசாயம் அல்லாத நேரங்களிலும், நிலமற்றவர்களும் மேற்சொன்ன பகுதிகளுக்கு கட்டட வேலைகளுக்கு செல்கின்றனர். 

 

இக்கிராமங்களுக்கு அருகில் ஓடும் மார்க்கண்டேயா நதி  (இது கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் கலக்கிறது) கே.ஆர்.பி அணையில் சென்று கலக்கிறது.

எங்கள் வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். ”வேப்பனஹள்ளி” என்றும் சில இடங்களில் வழங்கப்படுகிறது. இந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011-ஆம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 54-ஆவது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது ஆகும். தமிழகத்திலேயே தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் மூன்று மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகளும், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் 24 ஊராட்சிகளும், கெலமங்கலம் ஒன்றியத்தின் 3 ஊராட்சிகளும் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் ஓசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். 3ம் பாலினத்தனவர் 32 பேர் உள்ளனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயகோட்டை, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. 

 

மேலும் தமிழகத்தில் எந்த ஒரு பேருராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி இல்லாமல் ஊராட்சிகளை மட்டுமே கொண்டுள்ள ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது. 

 

எங்கள் வேப்பனபள்ளி மக்களின் வாழ்வாரம் விவசாயம் மட்டுமே. எங்கு சுற்றி திரும்பி பார்த்தாலும் பச்சை பசலேன்று விவசாயம் மட்டுமே காணப்படும். மேலும் தமிழகத்தின் மாம்பழத்தின் முதன்மை மாவட்டமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மாம்பழம் வேப்பனப்பள்ளி தொகுதியில் இருந்து தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல்  சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக தொழிலாக உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகளவில் இருந்து வருகிறது.ஆந்திரா, கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை கூட்டத்துக்கு வேப்பனப்பள்ளிதான் வழித்தடமாக உள்ளது, இவ்வாறு யானைகள் செல்லும் போது விவசாய பயிர்களை நாசமாக்கி விடுகின்றன

எங்கள் வேப்பனபள்ளியில் புகழ் பெற்ற கீரம்மா  திருக்கோயில் உள்ளது.

தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கீரம்மா கோவிலில் நேற்று இருமாநில நட்புறவை போற்றும் வகையில் 2 மாநில மக்கள் இணைந்து சிறப்பு வழிபாட்டை நடத்துகின்றனர். 

 

வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்னகொத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பிற்காலச் சோழா் காலத்திய கட்டடக் கலை அமைப்பைக் கொண்டதாகும்.அதேபோல இந்தக் கிராமம், ஓய்சாள மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளதாக பிற கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கோயிலில் படி எடுக்கப்பட்ட 15 கல்வெட்டுகள், அந்த கோயிலின் சிறப்பை நமக்குத் தெரிவிக்கின்றன. 

 

மேலும் எங்கள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதி முட்லு கிராமத்தில்  பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதண்ட ராமர் திருக்கோயில் உள்ளது

இக்கோயிலின் வாயிலானது வடதிசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தகுளமானது அழகிய கட்டமைப்புடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் மடப்பள்ளியும், மண்டபங்களும் அமைந்துள்ளன.

கருவறையில் வில்லேந்திதிய கோதண்டராமர், சீதை, இலக்குவனுடன் அழகுற காட்சியளிக்கின்றனர்.[2] இக்கோயிலின் தேரானது கற்சக்கரத்த்தால் பூட்டப்பட்டு மார்ச் மாத பௌர்ணமி நாளில் தேர்திருவிழா நடக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசிமாதம் பௌர்ணமியன்று ஆண்டு

திருவிழா நடத்தப்படுகிறது.இதையோட்டி ஒன்பது நாட்கள் விழா நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் வேப்பனப்பள்ளி உள்ளது. வேப்பனப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, சாலையை ஒட்டியவாறு கோயிலின் தோரணவாயில் அமைந்துள்ளது.

 

-முத்துகிருஷ்ணகுமார் தஞ்சாவூர்