தண்ணீர் தண்ணீர் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை எட்டாக்கனியாக இருக்கிறது இன்று வரை...
பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பாசமுள்ள பாட்டிவரை வரை குடத்துடன் அலைகிறோம் தண்ணீரை தேடி
எங்க ஊரை சுற்றியும் குளங்கள் உண்டு
ஆனால் தண்ணீர் தான் இல்லை !
தினமும் காலையில் தொடங்கி மாலை வரை தண்ணீர் எடுப்பது தான் மிகப்பெரிய போராட்டம்
மழையில்லாமல் வறண்ட குளங்கள், வற்றிபோன கிணறு, தூர்ந்து போன ஆழ்துளை கிணறு இப்படி எல்லாமே மாறிபோச்சு காலநிலை மட்டுமல்ல மனிதர்களும் தான் .
ஊர் உலகத்திற்கும் தண்ணீர் கொடுத்த மக்கள்
இன்று தண்ணீர் இல்லாமல் பிறந்த மண்ணை விட்டு
தண்ணீர் இருக்கும் ஊர் தேடி செல்கிறோம் .
காட்சி பொருளாக இருக்கும் குளங்கள், கிணறுகள் ,கால்வாய்கள் எல்லாம் மாறும் போது நாமும் ஊரை நோக்கி செல்வோம்.
தாகம் வரும் போது மட்டும் தண்ணீரை தேடாமல்
தண்ணீர் போதும் என்ற நிலைவரை தண்ணீரை சேமித்து வைப்போம்.
அனைவருக்கும் தண்ணீர் தின வாழ்த்துகள்.
-கமுதி மு.வெள்ளைப்பாண்டியன்.